Interim ban on renaming Kadayakud high court madurai bench order

ஊர் பெயர் மாற்றம் தொடர்பாக திருச்செந்தூர் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மரியநாயகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கு, இன்று (30/07/2021) நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுவழக்கை விசாரித்த நீதிபதி, "அனைத்து தரப்பு மக்களின் ஆலோசனையைப் பெற்று கூட்டம் நடத்தாமல், தன்னிச்சையாகக் கூட்டம் நடத்துவதா?” எனக் கேள்வி எழுப்பி தூத்துக்குடி மாவட்டம், கொம்புத்துறை என்ற ஊர்ப்பெயரைக் கடையக்குடி என பெயர் மாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisment