Interesting that the stolen bike in Chennai was caught in Trichy!

திருச்சி மாநகர விபச்சார தடுப்புப் பிரிவுபோலீசாருக்குவந்த புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் கருணாகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்மோகன்,பாலசரஸ்வதிஉள்ளிட்ட குழுவினர்கருமண்டபம்அசோக்நகர்ப்பகுதியில் அண்மையில்சோதனைமேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரூர் மாவட்டம்செல்லாண்டிபாளையத்தைச்சேர்ந்த இளம்பெண் ஒருவரை வைத்துதிருவானைக்காவல்பகுதியைச் சேர்ந்த ஐ.ஜான்என்கிறபிலோமிநாதன்என்பவர் பாலியல்தொழில்செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்தப் பெண்ணைபோலீசார்மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

இதுதொடர்பாகவழக்குப் பதிவு செய்துபிலோமிநாதனைகைது செய்து, அவர் வைத்திருந்த உயர் ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த இருசக்கர வாகனம் நண்பருடையது என அவர் கூறியதையடுத்து, வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் வாகன உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம்உள்ளிட்டவற்றைஒப்படைத்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுமாறுபோலீசார்அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அதன் பின்னர் பல நாட்களாகியும் வாகனத்தின் ஆவணங்களுடன் யாரும் வாகனத்தை மீட்க முன் வரவில்லை.

Advertisment

இதனால் சந்தேகமடைந்தபோலீசார், இருசக்கர வாகனத்தின்பதிவெண்ணை (சுரண்டி அழிக்கப்பட்டிருந்தது) கண்டறிந்து, அந்த வாகனம் குறித்த விவரங்களை இணைய வழியில்சோதனைசெய்தபோது, அது சென்னைகிரீம்ஸ்சாலைதிடீர்நகர்ப்பகுதியைச் சேர்ந்த ஆர்.ராஜேஷ்என்பவருக்குச்சொந்தமானவாகனம் என்பது தெரிய வந்தது. அதிலிருந்த உரிமையாளரின்தொடர்புஎண்ணை வைத்துபோலீசார்விசாரணைமேற்கொண்டதில், அந்த வாகனம் கடந்த ஏப்ரல் மாதம்கோடம்பாக்கம்பகுதியில்நிறுத்தியிருந்தபோதுமாயமானதும்அதுதொடர்பாககோடம்பாக்கம்காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்துகோடம்பாக்கம்போலீசார்பரிந்துரையின் பேரில், திருச்சி விபச்சாரத் தடுப்புப்பிரிவுபோலீசார்வாகனஉரிமையாளரைத்திருச்சி வரவழைத்து,வாகனத்தைத்திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.தொடர்ந்துநீதிபதி பாலாஜி உத்தரவின் பேரில் நேற்று மாலை உரிமையாளரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைத்தனர். வாகன உரிமையாளர்ராஜேஷ்நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது இருசக்கர வாகனத்தைப் பெற்றுச் சென்றார்.

Advertisment