Advertisment

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்..!

Intensification of jallikattu works in Madurai Avanyapuram ..!

மதுரை அவனியாபுரத்தில் தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக, வாடிவாசல் மற்றும் பேரிகார்டு அமைக்கும் பணிகளுக்காக கம்புகள் நடப்பட்டு வருகிறது.

Advertisment

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் பொங்கல் தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.

Advertisment

இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை தூண்கள் நடப்பட்டது. மேலும்,பார்வையாளர்களுக்கான பேரிகார்டு பணிகளுக்காக சவுக்கு கம்புகள் நடப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை அவனியாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

jallikattu madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe