Skip to main content

நகைக் கொள்ளையன் முருகனை பிடிக்க தீவிரம்... திக்குத் தெரியாத காட்டில் அலையும் போலீஸ்!

Published on 07/10/2019 | Edited on 08/10/2019

கடந்த 1ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியில் லலிதா ஜுவல்லரி இடது பக்க சுவற்றைத் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 13 கோடி நகைகளைத் திருடிச் சென்ற இந்தச் சம்பவத்தில் ஆரம்பத்தில் வட இந்திய கொள்ளையர்கள் தான் எனத் திருச்சி போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தத நிலையில் ஒரு புதுக்கோட்டையில் வட இந்திய கும்பல் தங்கியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நள்ளிரவில் புதுக்கோட்டை டைமண்ட விடுதியில் சுற்றிவளைத்து விசாரித்தபோது திருச்சி கொள்ளைக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிந்த நிலையில்தான் திடீரெனத் திருவாரூர் பகுதியில் வாகன சோதனையில் மணிகண்டன் என்பவர் நகையுடன் சிக்கியதும், ஒரு மர்ம நபர் தப்பியோடியதும் இந்த வழக்கில் புதிய திருப்பமாக அமைந்தது.

 

 Intense to catch jeweler theft Murugan

 

சிக்கிய மணிகண்டனும் தப்பியோடிய சுரேஷ் ஆகியோர் திருவாரூரை சேர்ந்த தென்னிந்தியாவை அதிரவைத்த கொள்ளையன் முருகனின் உறவினர் என்பது தெரிந்ததும் தமிழகப் போலீஸ் தலைமை அதிர்ச்சியடைந்தது. குறிப்பாகத் திருச்சி போலீஸ்க்கு இன்னும் டென்ஷன் ஆனது.

பிடிபட்ட மணிகண்டனை வைத்துச் சுரேஷ் பிடிக்க முயன்றபோது சுரேஷ் தன் மனைவியுடன் தப்பித்த நிலையில் வேறுவழியில்லாமல் மணிகண்டன் மற்றும் சுரேஷ் அம்மா கனகவள்ளி ஆகியோரை மட்டும் சிறையில் அடைத்தனர். 

கொள்ளையர் கும்பல் தலைவன் முருகன் இதுவரை தென்னிந்தியா முழுவதும் 100 கிலோவுக்கு மேல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா எனப் பல்வேறு மாநிலங்கலில் நகைகளை கொள்ளையடித்திருந்தாலும் இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 Intense to catch jeweler theft Murugan

 

கொள்ளையடித்தவுடன் திருவாரூர், பாண்டிச்சேரி, மும்பை, ஹைதராபாத், ஆந்திரமாநிலம், கிஷ்மத்பூர், ஹிம்யஸ்த்சாகர், ஷம்ஷாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனக்குச் சொந்தமான சொகுசு பங்களா போய்த் தங்கிவிடுவான். இல்லை என்றால் தமிழகப் போலீசாரின் சில முக்கிய அதிகாரிகள் துணையோடு தமிழகத்தில் சுகமாகச் சுற்றி வந்திருக்கிறான்.

இந்நிலையில் தமிழகத்திலே அதுவும் திருச்சியில் 13 கிலோ கொள்ளை நகை அடித்தது தமிழகப் போலீசுக்கு கொள்ளையன் முருகனை கட்டாயம் பிடிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அவன் நகைகளைக் கொள்ளையடிப்பதே சில முக்கிய நகைக்கடை தொழில் அதிபர்களின் விருப்பத்திற்காகவும் கொள்ளையடித்து அவர்களிடம் கொடுத்துள்ளான். இதனால் அவர்கள் மூலம் தமிழகக் காவல்துறையில் முக்கியப் புள்ளிகள் பலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். செல்போன் இல்லாமல் வலம் வரும் கொள்ளையன் முருகனை நெருங்குவது என்பது தமிழகப் போலீசுக்கு பெரிய சவலாகவே இருக்கிறது.

 

 Intense to catch jeweler theft Murugan

 

இந்நிலையில் திருச்சி மாநகரத் துணை ஆணையர் மயில்வாகனன் எப்படியாவது கொள்ளையன் முருகனை பிடித்துவிட வேண்டுமென்று தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் போலீஸாரின் தீவிரமான கெடுபிடிகள் மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாய் கனகவள்ளி, முருகனின் அண்ணன் மகன் முரளி, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாறன் என்கிறவரை விசாரணை செய்து பின்னர் அனுப்பிவைத்தனர்.

 

 Intense to catch jeweler theft Murugan

                                திருச்சி மாநகரத் துணை ஆணையர் மயில்வாகனன்

 

முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் உறவினர்கள் 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தால் உறவினர் மீது உள்ள பாசத்தில் முருகன் மற்றும் சுரேஷ் வெளியே வர அல்லது பதுங்கி இருக்கும் இடம் தெரிய வாய்ப்பு இருக்கிறது என்று உறவினர்கள் ஒருவரையும் விடாமல் விரட்டி விரட்டி பிடித்துச் சிறையில் அடைத்த நிலையிலும் உறவினர்கள் தனக்குச் சிறை செல்வதைப் பற்றி எல்லாம் முருகன் மற்றும் சுரேஷ் கவலைப்படாமல் தலைமறைவாகப் பதுங்கி இருக்கிறார்கள். 

 

thiruchy

 

எப்போதும் இப்படி  மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் பதுங்கி இருப்பார்களாம். இவர்கள் இரண்டு பேருக்கும் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்பதால் திருச்சி போலீஸார் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற விதத்தில் திக்குத் தெரியாத காட்டில் முருகனையும், சுரேஷையும்  தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.