Skip to main content

கோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விலக்கிக்கொண்ட காவல்துறை

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய காவல்துறை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அப்படி சென்றவருக்கு கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் சரியாக மதிக்காததோடு, அமர்வு தரிசனத்துக்கு கதவு திறந்துவிடாமல் மற்றவர்களைப்போல் வரிசையில் அனுப்பியுள்ளனர்.

 

 Insult inside the temple - Police explaining security

 

இதுஅவரை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் அதிருப்தியானவர் தன் குடும்பத்தாருடன் கோயிலில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று டிசம்பர் 14ந்தேதி கோயிலின் நான்கு கோபுர நுழைவாயிலில் மட்டும் பாதுகாப்புக்கு போலீஸாரை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுயிருந்த காவலர்களை திரும்ப பெற வைத்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

தீபத்திருவிழா முடிந்ததாக கூறப்பட்டாலும் அதிகாரபூர்வமாக மலை உச்சியில் எரியும் 11 நாள் தீபம் முடிந்தபின்பே முடிந்ததாக அர்த்தம். மலை உச்சியில் தீபம் எரிவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க கோயிலுக்கும், கிரிவலத்துக்கும் வருகின்றனர். கோயிலுக்குள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கியுள்ளது. அப்படியிருக்க அனுமதி தரும் காவல்துறையின் முக்கிய அதிகாரியின் குடும்பத்துக்கு அவமானம் என்பதால் காவல்துறை வட்டாரம் கோபமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.