Advertisment

தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு- காவிரி ஒழுங்காற்று குழு!

பர

காவிரி ஒழுங்காற்று குழுவின் 53வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரி தொடர்பாக விவாதித்த இந்த குழு இந்த மாதம் வரை தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைத் தரக்கோரி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.

Advertisment

அதன்படி தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுவினர் கர்நாடக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், செப்டம்பர் வரை கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீர் 26 டி.எம்.சி.யை சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe