Skip to main content

கஜா புயலால் உடமைகளை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி தமிழக மக்களால் மறக்க முடியாத நாள் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டு சென்ற கஜா புயல் தாக்கிய நாள்.

இந்த புயலில் பாதிக்கப்பட்டு விவசாயம், தொழில், உடமைகளையும் இழந்த பலரும் நடைபிணமாக வாழ்ந்து வருகிறார்கள். மரம், செடி, பயிர்களை இழந்த விவசாயிகள் மீள முடியாமல் தவிக்கிறார்கள். மீனவர்கள் கடன் மேல் கடன் வாங்கி தொழில் செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.
 

Inspector who rescued a mentally ill woman and handed over to her relatives

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு பரமநகர் கிராமத்தில் கீற்றுக் கொட்டகையில் வசித்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண் சாவித்திரி தனது மகள்களுக்காக கணவர் நடத்திய டீ கடையை நடத்தி குழந்தைகளை வளர்த்து வந்தார். கஜா புயல் அந்த ஏழையையும் விட்டு வைக்கவில்லை. அவரது கடை என்று சொல்லக் கூடிய கொட்டகையும் குடியிருந்த கொட்டகையும் காணாமல் போனது. பிழைக்க வழியில்லை. சரிசெய்யப்படாத கொட்டகையில் இருந்து அழுதார். 

அம்மாவின் அழுகையை நிறுத்த பள்ளிப் படிப்பை முடித்த கடைசி மகள் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இப்படியே தனது நிலையை நினைத்து நினைத்து கலங்கிய அந்த பெண்ணின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டது. தானாக பேசத் தொடங்கினார். ஆறுதல் சொல்ல அருகில் மகளும் இல்லை. அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட பகலில் வீட்டில் முடங்கி கிடக்கும் சாவித்திரி இரவில் கடை பற்றிய நினைவு வந்ததும் கடை இருந்த இடத்திற்கு சென்று அதைப் பார்த்த பிறகு என்ன செய்வதென்றே தெரியால் அந்தப் பக்கம் வருவோரை எல்லாம் பேசினார்.

அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று சத்தம் போடத் தொடங்கினார். ஆனால் அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து வருந்தினார்களே தவிர அவரை யாரும் திட்டவில்லை, விரட்டவில்லை. இந்த நிலையில் தற்போது வடகாடு காவல்நிலையத்திற்கு புதிதாக வந்துள்ள காவல் ஆய்வாளர் பரத்சீனிவாசன் அந்த பெண்ணின் நிலை பற்றி அறிந்து இன்று பெண் போலிசாரின் உதவியுடன் காவல்நிலையம் அழைத்து வந்து அவருக்கு புதிய உடைகள் கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்து சமாதானமாக பேசிய பிறகு அவரது உறவினர்களை வர வைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் விரைவில் மனநல சிகிச்சைக்கு எற்பாடுகள் செய்து சிகிச்சைகு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். மனநல சிகிச்சை கொடுப்பதுடன் அந்த பெண்ணின் மீதமுள்ள வாழ்க்கையை கழிக்க அவருக்கு தெரிந்த டீ கடை நடத்த அரசாங்கமோ, தன்னார்வலர்களோ உதவிகள் செய்தால் மீண்டும் மனநிலை பாதிக்காமல் மீதி காலத்தையும் நல்லபடியாக கழிப்பார். மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.