Skip to main content

 நீங்கள் சொன்னால் தானே  நாங்களும்  மக்களிடம் பேசும்போது எடப்பாடி அண்ணன்....

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 15 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு நோய்த்தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்த நிலக்கோட்டை வேளாண்துறை சார்பில் மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த மருந்து தெளிக்கும் பணி ஒட்டப்பட்டி கிராமத்தில் மக்காச்சோள காட்டில் நடந்தது. அந்த பணியினை நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது வேளாண்துறை அதிகாரிகள் படைபுழுக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து  விவசாயிகளிடமும் எம்எல்ஏ விடமும் விளக்கம் அளித்தனர்.
 

inspection by admk MLA


அப்பொழுது எம்எல்ஏ தேன்மொழி "படைப்புழு கட்டுப்படுத்தும் முறையை தெளிவுபடுத்துங்கள்" என்று அதிகாரிகளிடம் கூறினார். அப்பொழுது வேளாண்மைத்துறை அதிகாரிகள் "படைப்புழு ஒழிப்பது சம்பந்தமாக  விவசாயிகளிடம்  தெளிவாக சொல்லிவிட்டோம். படைப்புழு ஒழிப்பதற்கு அரசு ஒரு எக்டருக்கு 4500 ரூபாய் மருந்து தெளிப்பதற்கு அரசு நிவாரண உதவி கொடுக்கிறது" என்று கூறினார். 

அதைக்கேட்ட எம்எல்ஏ "அதனால் தான் நானும் விளக்கமாக உங்களிடம் சொல்லச் சொன்னேன். நானும் ஒரு விவசாயி தான் இப்படி எடப்பாடி அண்ணன் விவசாயிகளுக்கு  என்னென்ன உதவிகள் செய்கிறார் என்பதை எங்களிடம்  நீங்கள் சொன்னால் தானே  நாங்களும்  மக்களிடம் பேசும்போது எடப்பாடி அண்ணன்.... என்னென்ன செய்தார் என்று  விவசாயிகளிடமும் மக்களிடமும் சொல்லமுடியும்" என்று பேச்சுக்கு பேச்சு எடப்பாடி புகழவே எம்.எல்.ஏ தேன்மொழி பாடினர் அதைக்கேட்டு  அருகே இருந்த  விவசாயிகளோ மந்திரி சபை மாற்றம் ஏதும் வந்தால் "எம்.எல்.ஏ அக்காவுக்கு மந்திரி பதவி  கிடைக்கப்போவது உறுதி" என்று  குரல் கொடுத்ததை கண்டு எம்.எல்.ஏ தேன்மொழியும் பூரித்துப் போய்விட்டார்.


அதை தொடர்ந்து நிலக்கோட்டை தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளின் பிரச்சினையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வேளாண் துறை அதிகாரி சுருளியப்பனிடம்  வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வின்போது வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.