Skip to main content

மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Insisting on establishment of scientific research center for Neyveli students

வடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாவட்ட மாநாடு  நடைபெற்றது. இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக காலை  10 மணி அளவில் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து அறிவியல் கலை நிகழ்வுடன் கூடிய மாணவர்களின் ‘போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி’ மாவட்ட துணைத் தலைவர் தனகேசவமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற  மாநாட்டில், தலைவர் பால குருநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர் வி. வேல்முருகன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற வேலைகளை மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் அறிக்கையுடன் விளக்கிப் பேசினார். பொருளாளர் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். மாநிலச் செயலாளர் எஸ். ஸ்டீபன் நாதன் மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார். 

Insisting on establishment of scientific research center for Neyveli students

எயிட் இந்தியா செயலாளர் அறிவழகன், மாற்று ஊடக மைய செயலாளர் குணாளன், ஆலோசகர் பாலமுருகன், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். கலைச்செல்வி மற்றும் ஜெயவேல் இணைந்து அறிவியல் பாடல் பாடினார்கள்.

இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஆர். கார்த்திகேயன்‌, செயலாளராக சே. பரமேஸ்வரி, பொருளாளராக த. ஜெயபிரகதி, துணைத் தலைவர்களாக பி. தனலட்சுமி, எஸ். செல்வமணி, ஜி. கேத்தரின், வி. பூர்வசந்திரன், ஆர். தாமோதரன், துணைச் செயலாளர்களாக தனகேசவமூர்த்தி, அருள்தீபன், எம். உதயேந்திரன், பிரியா, முருகானந்தம் ஆகியோருடன் 9 ஒருங்கிணைப்பாளர்கள் 25 செயற்குழு உறுப்பினர்கள் புதியதாகத்  தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாக மற்றும் செயற்குழுவை பாராட்டி மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணி சிறப்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் தனலட்சுமி நன்றி உரை நிகழ்த்தினார்.

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதை கலாச்சாரத்தை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தொடர்ந்து  கவனம் செலுத்தி பள்ளிகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திட வேண்டும். பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில், என்.எல்.சி  நிறுவனம் அறிவித்த ‘அறிவியல் ஆராய்ச்சி மையத்தை’ நிறுவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் ஆரோக்கிய வாழ்வு தொடர்ந்து கீழ் நிலையில் உள்ளது. அவற்றை உறுதியுடன் வளர்த்திட மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் மேலும் பல வகையில் சேவை மற்றும் பிரச்சாரம் செய்திட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.