Skip to main content

காதல் மனைவி... பூட்டிய வீட்டுக்குள் அழுது கொண்டே இருந்த குழந்தை... நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இரண்டாவது மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிஷார் அகமது (37). கழிவு குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஹசினா (21) என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நிஷார் அகமதுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி ஹசினா நடவடிக்கையில் அடிக்கடி நிஷார் அகமதுக்கு சந்தேகம் அடைந்து அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. 

 

incident



இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்றும் கணவன், மனைவி இடையே சண்டைப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நிஷார் அகமது வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டி விட்டு அங்கிருந்த கத்தியால் மனைவி கழுத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஹசினா படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் நிஷா அகமது தனது கழுத்தை கத்தியால் தனக்கு தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. வீட்டுக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் மட்டும் நீண்ட நேரமாக கேட்டுள்ளது.இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் அருகில் வசிக்கும் ஹசினாவின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஹசினாவின் தயார் வீடு அருகில் இருப்பதால் தனது மகள் வீட்டுக்கு உடனடியாக வந்தார்.


பின்பு குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததால் பதறிப் போன ஹசினாவின் தாய் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ஹசினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நிஷார் அகமது கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், நிசாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஹசினா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நிசார் மீது திருப்பூர், வீரபாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நிசாரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரது முதல் மனைவி பிரிந்து சென்றுள்ளார் என்றும், அதன் பின்பு காதலித்து ஹசினாவை திருமணம் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.