Advertisment

சிதைந்த கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு... ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்ட ஆட்சியர்!

Advertisment

கரூர் மண்மங்கலம் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்குபுறத்தில் அமைந்துள்ளது சிற்றூர் செங்காளிபாளையம். அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில் சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன. சிவன் கோவிலில் செவ்வக வடிவிலான தனிக் கல்லின் ஒரு பக்கத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்துவடிவில் 13 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. முதல் பத்து வரிகளில் தானம் பற்றிய செய்தியும், இறுதியாக உள்ள மூன்று வரிகளில் வடமொழி வாழ்த்து சுலோகமும் காணப்படுகின்றன. இப்பகுதி இன்று ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களை பாதுகாப்பாக கரூர் அருங்காட்சியகத்தில் எடுத்து வந்து வைக்கவும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

inscription karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe