மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் இன்று காலை சென்னை ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சாலையில் நின்று பிச்சை எடுத்து பெட்ரோல் போடும் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சமையல் கேஸ் சிலிண்டரை பாடை கட்டி மாலை போட்டு தூக்கி வந்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்து விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment