Skip to main content

இலங்கைத் தமிழர்களின் வேலைவாய்ப்புக்கான புதுமுயற்சி ‘திறன்களின் சங்கமம்’!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

தெ.சு.கவுதமன்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே, முகாம்களில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, யூ.என்.ஹெச்.சி.ஆர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சென்னை சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து, 'திறன்களின் சங்கமம்' என்ற வேலைவாய்ப்பு முகாம் மற்றும் விளையாட்டுத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை, கடந்த சனிக்கிழமை (25.6.22) சென்னை எழும்பூரில் நடத்தியது. வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

 

வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை, கல்வி மற்றும் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்துவிளங்கும் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைப் பெருக்கிடவும், தகுந்த ஆலோசனை வழங்கி அவர்களை வழிநடத்திடவும் புதிய முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கைத்தமிழர்களில் பெரும்பாலானோர், பெயின்டர், எலக்ட்ரீஷியன் போன்ற சிறுசிறு வேலைவாய்ப்புகளை மட்டுமே பெற்றுவருகிறார்கள். அவர்களில் தகுதிவாய்ந்தவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிவாய்ப்பினைப் பெறுவதற்கு ஓர் வாய்ப்பாக இந்த 'திறன்களின் சங்கமம்' நிகழ்ச்சி அமைந்தது.

 

இந்நிகழ்ச்சிக்கு, தமிழகத்திலுள்ள 72 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பலரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், சீக்கெம், பஹ்வான் சைபர்டெக், ப்ரூடில், கெவின்கேர், கிரீன்ட்ரென்ட்ஸ், டீம்லீஸ், ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ், தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் ஆகிய 8 நிறுவனங்கள் பங்கெடுத்து, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல்களை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்வு பெற்ற 14 பேரில் 6 பேருக்கு அன்றைய தினமே கெவின்கேர் நிறுவனத்தில் வேலை உறுதிசெய்யப்பட்டது. மேலும் 37 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்று அடுத்தகட்ட நேர்காணலில் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர்.

 

இந்த முகாமில், வேலைவாய்ப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல். விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு அத்துறையின் வல்லுநர்களைக்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களின் வெற்றியை மேலும் தொடர அடுத்தகட்டமாக என்னென்ன செய்ய வேண்டும், உடல்திறனைப் பேணுவதற்கு என்னமாதிரியான டயட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.கலைத்துறையில் சாதித்த இலங்கைத் தமிழர்களை அழைத்துவந்து, அவர்கள்மூலமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தவைத்து அவர்களின் திறனைப் பலரும் அறியும்படி செய்தார்கள். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, தகுதிக்கேற்ற வேலையைப் பெற்றுத்தர வேண்டுமென்றும், அதன்மூலம் முகாம்களில் வசிக்கும் மற்ற இளைஞர்களும் நல்ல உத்வேகத்தைப் பெறுவார்கள் என்றும் துறை ஆணையர் தெரிவித்தார்.

                                                                                                                                                                             

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.