Skip to main content

மர்ம நபரின் அழைப்பால் ஒரு லட்சம் பணத்தை இழந்த அப்பாவி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

Innocent who lost a lakh of money at the call of a mysterious person

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது சிறுவாலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(36). கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஆறுமுகத்திடம் செல்போன் மூலம் பேசியுள்ளார். அப்போது தான் ஒரு தனியார் மொபைல் போன் டவர் அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறிய அந்த மர்ப நபர் மணிகண்டனிடம் பேசியிருக்கிறார். பின்னர் அவர், உங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம்.

 

அதற்கு முன் பணமாக நீங்கள் 25 லட்ச ரூபாய் முன்பணமாகவும் 30 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாக உங்களுக்குப் பணம் தரப்படும் அதற்கு நீங்கள் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் அந்த நபர் கூறியபடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி வரை ஆறு தவணைகளாக ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார் மணிகண்டன். அதன்பிறகு அந்த நபரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவரது போன் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

 

தான் மோசடியில் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து  சுமார் ஒரு லட்சம் பண மோசடி செய்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதே மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் பகுதி உட்பட மேலும் சில இடங்களில் இதேபோன்று போன்ற செல்போன் டவர் அமைத்துத் தருவதாகக் கூறி செல்போன் மூலம் பேசி ஏமாற்றிப் பல லட்சம் பணம் பறித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்தும் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிக்கை, ஊடகங்களும் செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவ்வப்போது டெலிபோன் டவர் அமைப்பதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.