ADVERTISEMENT

'இழைக்கப்பட்ட அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது' - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு!

03:08 PM Jan 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 'சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'இது திமுக உள்ளிட்ட சமூக நீதி மீது பற்றுகொண்ட இயக்கங்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஆதிக்க சூழ்ச்சியால் ஓபிசி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்வோம்' எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT