Skip to main content

ஊசி உடைந்து உடலில் சிக்கிய பரிதாபம்...சிகிச்சை பெற சென்றவருக்கு நடந்த கொடுமை!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டைஃபாய்ட் காய்ச்சலுக்காக சுகிச்சைக்கு சென்ற தம்பிதுரை என்பவருக்கு ஊசி போட்ட போது, ஊசியின் முனை பகுதி உடைந்து 7 மிமீ அளவிற்கு இடுப்பு பகுதி எலும்பிற்குள் சிக்கி உள்ளது. நியாயம் கேட்க சென்றவருக்கு  மருத்துவமனை நிர்வாகம் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கூறும் தம்பிதுரைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 patient

 


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26). கடந்த  மாதம் 22 ஆம் தேதி காய்ச்சலுக்காக  குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக சென்றபோது, டைஃப்பாய்ட் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக தம்பிதுரைக்கு செவிலியர் ஒருவர் ஊசி போட்டுள்ளார்.

அப்போது ஊசியின் முனைப்பகுதி  இடுப்பு பகுதியில் உடைந்து விட்டது. இதனை கவனித்த தம்பிதுரை, ஊசி போட்ட செவிலியரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த செவிலியர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றிருக்கிறார். வீட்டிற்கு சென்ற தம்பிதுரைக்கு இடுப்பு பகுதியில் அதிகமாக வலி ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற தம்பிதுரை, இது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அங்குள்ள மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்காமல் வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து தம்பிதுரை, எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, ஊசி போட்ட இடுப்பு பகுதியில், 7 மில்லி மீட்டர் அளவிற்கு ஊசியின் முனைப்பகுதி உடைந்து உள்ளே எலும்பு பகுதியில் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து மீண்டும் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று கேட்ட போது, மருத்துவர்கள் சரியான பதில் கூறாமல் மிரட்டல் விடுத்து துரத்திவிட்டதாக புகார் கூறுகிறார் தம்பிதுரை. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தம்பிதுரைக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.