Skip to main content

தாயை இழந்து துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த கைக்குழந்தை.... கண்கலங்கிய தந்தை!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

The infant who lost his mother and came to Tamil Nadu from Dubai

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) - பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளனர். இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக இறந்துள்ளது. இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வேலை தேடி மனைவி பாரதி மூன்றாவது கைக்குழந்தை தேவேஷ் உடன் துபாய்க்குச் சென்றுள்ளார்.

 

அங்கு ஒருமாத காலமாக வீட்டு வேலை செய்துவந்த நிலையில், கடந்த மே மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மே 29ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தாய் பாரதி உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை தேவேஷ் துபாயில் தவித்துவந்துள்ளது. இதனையறிந்த துபாய் திமுக நகர அமைப்பாளர் எஸ்.எஸ். முகமது மீரான், அங்குள்ள இந்திய தூதரகத்திற்குத் தகவல் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து துபாயிலிருந்து பயணி ஒருவரின் உதவியுடன் கைக்குழந்தை நேற்று (17.06.2021) மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. கள்ளக்குறிச்சியில் இருந்து வேலனும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து தன்னுடைய குழந்தையைக் கட்டியணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

துபாயிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் - சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!  

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
TN fishermen rescued from Dubai will be sent to their native places

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக எந்தப் பக்கம் சென்றாலும் பிரச்சனையில் சிக்கித் தவிப்பது வழக்கமாக நடக்கின்ற கொடுமையாகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிப்பதற்காக துபாய் சென்ற மீனவர்கள், சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் தவித்த நிலையில், தூதரகம் வாயிலாகத் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.   

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 பேர் துபாய் சென்று, அங்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணியினைச் செய்துவந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்குமுன் கன்னியாகுமரி மாவட்டத்தைச்  சேர்ந்த மீனவர் ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குச்  செல்லவேண்டும் என்று அவர் விடுமுறை கேட்டார். ஒப்பந்தகாரர் இதற்குச் சம்மதிக்காத நிலையில், மீனவர்களுக்கும் ஒப்பந்தகாரருக்குமிடையே  வாய்த்தகராறு மூண்டது.

இதனைத் தொடர்ந்து, முறையான சம்பளமோ, உணவோ வழங்கப்படாத  நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியை அனைத்து மீனவர்களும்  மேற்கொண்டனர். முன்பு நடந்த வாக்குவாதம் வழக்காக துபாயில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊருக்கு மீனவர்கள் திரும்பவேண்டுமென்றால், பணத்தைச் செலுத்தினால்தான் அது முடியும்  எனக் கறாராக ஒப்பந்தகாரர் தெரிவித்துவிட்டார்.

அதனால் அம்மீனவர்கள் நீதிமன்றத்தையும், இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு, தமிழக அதிகாரிகளின் உதவியுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.