மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு

infant mortality; Parents are sad

ஈரோடு மாவட்டம், அந்தியூர், கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ் (29). வெல்டர். இவரது மனைவி சிம்ரன் (28). இவர்களுக்கு 3 வயதில் சையத் அத்னான் என்ற மகன் உள்ளார்.

சிம்ரன் அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சிம்ரன் வேலைக்குச் செல்லும்போது குழந்தை சையத் அத்னானையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, அங்கிருந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்துக்குடித்திருக்கிறான்.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குழந்தையை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான், சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

child Erode incident police
இதையும் படியுங்கள்
Subscribe