Skip to main content

பிள்ளைகளின் உயிரோடு விளையாடும் தனியார் பள்ளி, கல்லூரிகள்...

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியின் இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி பயணித்த போது, பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதேபோல கடந்த ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது பிரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன்களில் அப்பள்ளி மாணவர்கள் அழைத்துசெல்லப்பட்ட போது, அதில் ஒரு வேனின் ஓட்டுநர் ஏ.சித்தூர் என்ற இடத்தில் செல்போன் பேசியபடி வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் வேன் அவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
 

inexperienced drivers are being used for school and colleges

இதில் விஜய கிருஷ்ணகாந்த், சார்ஜன் நம்பி, வேம்பு கிருஷ்ணன், கோகுலகண்ணன், நரேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவர்களில் 3 பேரின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களை மேல் சிகிச்சைக்காக கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. விபத்தை ஏர்படுத்திய ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

பொதுவாக தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களை முறையாக பராமரிப்பது இல்லை. மேலும் புது வாகனங்களை வாங்குவதில்லை. வேறு எங்காவது ஓடி தேய்ந்து போன வாகனங்களை வாங்குவது, ஏலத்தில் எடுத்து அதை ஒர்க் ஷாப்பில் கொடுத்து புனரமைப்பு செய்து அதை மீண்டும் இயக்குவது என்றுதான் இருக்கிறது. சில இடங்களில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களை கூட நியமிப்பது இல்லை.
 

inexperienced drivers are being used for school and colleges

காரணம், போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்தினால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், கிராமப்புறங்களில் முறையான பயிற்சி இல்லாமல் விவசாய டிராக்டர், டாட்டா ஏஸ் போன்ற வண்டிகளை அரைகுறையாக ஓட்டும் ஓட்டுனர்களை தேர்வு செய்து  பள்ளி வேன், பஸ் ஓட்டுவதற்கு நியமிக்கிறார்கள். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஓட்டுனராக இருந்து வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும்  கொண்டு வந்து தங்கள் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஓட்ட வைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உடல் பலம் குறைந்து வாகனங்களை திறமையாக இயக்க முடியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. முறையான பயிற்சி இல்லாததாலும், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாததாலும் கண்டபடி வாகனங்களை ஓட்டி விபத்துக்களை உண்டாக்குகின்றனர்.

 

அப்படிப்பட்டவர்களை பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்க சொல்லி அவர்கள் மூலம் விபத்தை ஏற்படுத்தி பிள்ளைகளின் உயிரோடு விளையாடுகிறது தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள். சில இடங்களில், இதனை கண்காணிக்க வேண்டிய அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு இப்படிப்பட்ட தவறுகளை எல்லாம் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுகிறது. எனவே பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்குவதற்கு முறையான பயிற்சி, ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசு வலியுறுத்துவதோடு, தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு கடுமையான விதிமுறைகளையும் வகுத்து உத்தரவிடவேண்டும் என கருத்து எழுந்துள்ளது.
 

inexperienced drivers are being used for school and colleges

பொதுவாக பல தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பிள்ளைகள் படிப்பிற்காக பெற்றோர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். அப்படி வாங்கிய பணத்தில் திறமையானவர்களை ஓட்டுநராக நியமிப்பது இல்லை. இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும், பெற்றோர்களும் குரல் கொடுக்க வேண்டும், அப்போது தான் தங்கள் பிள்ளைகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

44 மாணவர்களுடன் புறப்பட்ட பள்ளிப் பேருந்து; பற்றி எரிந்த தீ

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
school bus suddenly caught incident on the road

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல் குட்டை பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆலங்காயம், வாணியம்பாடி பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பலநூறு மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காகப் பள்ளி நிர்வாகம் கட்டண பேருந்து இயக்கி வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்ததும் 4.30 மணியளவில் 44 மாணவ – மாணவிகள், மூன்று ஆசிரியர்களைப் பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு வெள்ளக்குட்டை நோக்கி புறப்பட்டது பள்ளிப் பேருந்து. பள்ளி வளாகத்தை விட்டு பேருந்து வெளியே வந்து சென்று கொண்டிருந்தபோது வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புப் பள்ளம் என்கிற இடத்தின் அருகே திடீரென பேருந்து நின்றது. மீண்டும் ஸ்டார்ட்டாகவில்லை. பேருந்து ஓட்டுநர் கீழே இறங்கி பேட்டரி செக் செய்தபோது, பேட்டரி ஒயர் சார்ட்ஷர்குட்டாகி எரியத் தொடங்கியது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன ஓட்டுநர் உடனடியாக ஓடிச்சென்று பேருந்தில் இருந்த குழந்தைகள், பிள்ளைகளைப் பேருந்திலிருந்து இறங்கச் சொல்லி கத்தினார். மாணவ – மாணவிகள் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து தங்களது புத்தகப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடினர். அப்போது பேருந்துக்குள் புகை அதிகரிக்கத் துவங்கியது, பள்ளிப் பிள்ளைகள் அலறியபடி பேருந்திலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். அடுத்த இரண்டு நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து திகுதிகுவென எரியத் துவங்கியது.

சாலையில் பேருந்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்துக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆலங்காயத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருகை தந்து 1 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். அணைக்கப்பட்ட பேருந்துக்குள் பள்ளிப் பிள்ளைகளின் வாட்டர் பாட்டில்கள், சாப்பாடு டப்பாக்கள் எரிந்தும் உருகியும் பல இருந்தன. இது குறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப் பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு மே, ஜூன் மாதங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்களால் தங்களது லிமிட்டில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுகள் மேம்போக்காக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும் ஒரு பேருந்துக்கு இவ்வளவு என ரேட் பிக்ஸ் செய்து அதனை வாங்கிக்கொண்டு ஆய்வு செய்ததுபோல் பேருந்து நன்றாக இருக்கிறது எனச் சான்றிதழ் தந்து அனுப்பி விடுகின்றனர் அதிகாரிகள். அப்படி ஆறு மாதத்துக்கு முன்பு மேம்போக்காக ஆய்வு செய்யப்பட்ட சரியாகப் பராமரிக்காத இந்தப் பள்ளிப் பேருந்து தீப்பற்றி முழு பேருந்தும் எரிந்துள்ளது எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பேருந்து தீப்பிடிக்கும் போது உள்ளே பள்ளிப் பிள்ளைகள் இருந்தனர். ஓட்டுநரின் சமயோஜித்தால் உடனடியாக அவர்களை அவசர அவசரமாகக் கீழே இறக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றால் பிள்ளைகள் உயிர்த் தப்பினர்.