Skip to main content

"சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

"The Indus Valley Civilization will be studied in comparison" - Chief Minister MK Stalin's announcement!

 

சட்டப்பேரவையில் இன்று (09/05/2022) 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தொடர்ந்து இந்தியாவின் பிற்பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்டது போல இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது. தமிழகத்தில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருந்துள்ளது. கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் சேகரிக்கப்பட்ட இரும்பு கரிம மாதிரி அமெரிக்காவில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் 'Beta Analytical Laboratory'- ல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 

 

இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான் வனங்களை அளித்து வேளாண்மை செய்ய தொடங்கினர். இரும்பு கரிம மாதிரிகளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.1615, கி.மு. 2172 எனத் தெரிந்துள்ளன. தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலத்திற்கான தெளிவான விடை கிடைத்துள்ளது. அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். 

 

சிந்து சமவெளியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்திடும் திட்டம் இந்தாண்டு முதல் மேற்கொள்ளப்படும். தமிழர்கள் தடம் பதித்த இந்தியாவின் பிற பகுதிகளில் அகழாய்வுகள் இந்தாண்டு மேற்கொள்ளப்படும். கேரளா- பட்டணம், கர்நாடகா- தலைக்காடு, ஆந்திரா- வேங்கி, ஒடிஷா- பாலூரில் அகழாய்வு நடைபெறும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.