Skip to main content

தகவல் பெறும் உரிமை சட்டப்படி ஊராட்சி ஆவணங்களை ஆய்வுசெய்த தனிமனிதர்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

An individual who examined panchayat documents under the Right to Information Act ...

 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது ராமநத்தம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்படி ராமநத்தம் ஊராட்சி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோவிந்தசாமி, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநத்தம் ஊராட்சியின் ஆவணங்களை ஆய்வு செய்து பார்வையிட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தார். 


இதையடுத்து ஆணையத்தின் பொது தகவல் அலுவலர், கோவிந்தசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தாங்கள் கேட்டு கொண்டுள்ளபடி ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊராட்சியின் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்ற அனுமதி வழங்கி கடிதம் அனுப்பி இருந்தார். 

 

அதேபோல் ராமநத்தம் ஊராட்சிக்கும் பொதுத்தகவல் அலுவலர் அனுப்பிய கடிதத்தில் கோவிந்தசாமி தங்கள் ஊராட்சி ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு, அக்டோபர் 20ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிந்தசாமிதமக்கு  அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின்படி 12ஆம் தேதி ராமநத்தம் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்ற கோவிந்தசாமியிடம் தங்களுக்கு வந்த கடிதத்தில் அக்டோபர் 20ஆம் தேதிதான் தங்களுக்கு ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது என்று கூறி கோவிந்தசாமியை திருப்பி அனுப்பி விட்டனர். 

 

பிறகு பொதுத்தகவல் அலுவலர் கிராம ஊராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின்படி, நேற்று 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மீண்டும் ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு கோவிந்தசாமி சென்றார். ஊராட்சி செயலாளர் பிரேம், தகவல் பெறும் உரிமை சட்டப்படி  கோவிந்தசாமி ஊராட்சி கணக்கு வழக்குகளை ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதித்தார். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊராட்சியில் வரவு செலவு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார் கோவிந்தசாமி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி ஒரு ஊராட்சி ஆவணங்களை ஒரு தனிநபர் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது சமூக அக்கறையுள்ள பல்வேறு தரப்பினரிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.