Skip to main content

கமுதியில் இளம்பெண் எரித்து கொலை... உறவினர்கள் நாடகம் அம்பலம்

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து டி.வல்லகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகள் ராதிகா. கடந்த மாதம் 29ம் தேதி அதே கிராமத்தில் உள்ள கால்வாயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ராதிகா. சடலத்தை மீட்ட அபிராமம் போலீசார் சம்பந்தப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

indiscipline incident in kamuthi... police investigation

 

அரசு மருத்துவமனையில் ராதிகாவின் உடல், உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கப்பட்ட போது அதை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராதிகா கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தகொலையில் உள்ளவர்கள் குறித்து விசாரணை செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

indiscipline incident in kamuthi... police investigation

 

ராதிகாவிற்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினார். எனவே அந்த மாற்று சமுகத்தை சேர்ந்தவர்கள் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இந்த தற்கொலை வழக்கானது வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியது. குறிப்பிட்ட இந்த இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அரசு சார்பில் வழங்கப்படும் 8 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீட்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் ராதிகா குடும்பத்துக்கு கிடைத்தது.

 

indiscipline incident in kamuthi... police investigation

 

 

indiscipline incident in kamuthi... police investigation

 

 

இழப்பீடை பெற்றுக்கொண்ட ராதிகாவின் குடும்பத்தினர் சடலத்தை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை தீவிரப்படுத்தியதில் ராதிகாவுக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகியுள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளடைவில் பிரச்சனையாக உருமாறியது. அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அப்போது வேறு ஒரு நபருடன் ராதிகாவுக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

indiscipline incident in kamuthi... police investigation

 

அந்த நபரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அந்த நபர் கொலையாளி அல்ல என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து ராதிகாவின் குடும்பத்தினர் பக்கம் போலீஸின் பார்வை திரும்பியது. அவர்களை துருவித்துருவி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தனர். 

 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரித்ததில் ராதிகாவின் தவறான தொடர்பை கண்டித்த உறவினர்களே ராதிகாவை அடித்து கொலை செய்து வீசிவிட்டு கடைசியில் நாடகமாடியது தெரியவந்தது. இந்த வழக்கில் ராதிகாவின்  உறவினர்கள் பாபா, விக்னேஷ்வரன், முருகன், மோகன், அழகர்சாமி, முனியசாமி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.