Skip to main content

மறைமுகத் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் விவரம் (12.45PM)!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. 


மறைமுகத் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம் (12.45PM)

தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு  செய்யப்பட்டார். 

கரூர் தான்தோன்றி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவகாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கரூர் க.பரமத்தி ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவின் மார்க்கண்டேயன் தேர்வு. 

INDIRECT LOCAL BODY ELECTION RESULTS ALL DISTRICT DETAILS

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.

கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு. 

திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷர்மிளா போட்டியின்றி தேர்வு. 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக அதிமுகவின் தங்கம்மாள் தேர்வு.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தஞ்சை மாவட்டம், ஊராட்சி குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு. 

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பழனிமணி தேர்வு.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை தேர்வு.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியக் குழுத் 10- வது வார்டு தலைவராக சுயேச்சை வேட்பாளர் மகேஷ் வெற்றி. 

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த தங்கமணி போட்டியின்றி தேர்வு. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவை சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு. 

அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் வெற்றி. 

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த மணிமேகலை மகேந்திரன் தேர்வு. 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் தலா 5 இடங்கள் கிடைத்திருந்ததால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனி வெற்றி. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக திமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் தேர்வு. 

செய்யாறு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த ராஜி ஒருமனதாக தேர்வு. 

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பா சங்கர் போட்டியின்றி தேர்வு.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வசந்தா போட்டியின்றி தேர்வு.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 9- வது வார்டில் அதிமுகவின் நர்மதா துரைசாமி தேர்வு.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் கமலா அன்பழகன் தேர்வு.

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சதீஷ்குமார் போட்டியின்றி தேர்வு. 

திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வெற்றி. 

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றிய குழு தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டல் ரமணிபாய் தேர்வு. 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த சண்முக வடிவேல் தேர்வு. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு. 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் தேர்வு. 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா வெற்றி. 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியக்குழு தலைவராக திமுகவின் சர்புதீன் பர்வீன் வெற்றி. 

கோவை மாவட்டம், சூலூர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலசுந்தரம் வெற்றி. 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் தேர்வு. 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த முனியாண்டி தேர்வு. 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவின் சசிகலா பொன்ராஜ் தேர்வு. 

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் பூங்கோதை வரதராஜன் தேர்வு. 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கிளாரா போட்டியின்றி தேர்வு.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் மாரியம்மாள் வெற்றி. 

இதனிடையே சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் 4 திமுக கவுன்சிலர்கள் வந்த நிலையில், 4 அதிமுக கவுன்சிலர்கள் வராததால்  தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மறைமுகத் தேர்தல் வெற்றி நிலவரம் (12.45PM)

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி (20/27)
அதிமுக கூட்டணி- 11
திமுக கூட்டணி- 9

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி (191/314)
அதிமுக கூட்டணி- 119
திமுக கூட்டணி- 72


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.