Skip to main content

35 வயதில் மறைமுக வாழ்க்கை! கொலையில் முடிந்த தவறான பழக்கம்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

சிலவகை காதல்.. தவறான தொடர்புகள்.. கொலைகளெல்லாம் விசித்திரமாக உள்ளன.  அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கட்டக்கஞ்சன்பட்டி என்ற கிராமத்தில் அப்படி ஒரு கொலைதான் 7-ஆம் தேதி நடந்திருக்கிறது. 

 

Indirect life at age 35! The wrong habit that ended in bad incident


19 வருடங்களுக்கு முன் அங்காளஈஸ்வரி,  தனது 16 வயதிலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான திருமுருகன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 18 வயதில் நந்தினிபிரியா என்ற மகளும் 15 வயதில் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 18 வயதிலேயே மகள் நந்தினிபிரியாவுக்கும் திருமணம் நடத்திவிட்டார் அங்காளஈஸ்வரி. குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால், சிங்கப்பூர் போய் 4 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்துவிட்டு, கட்டக்கஞ்சன்பட்டிக்கு வந்தார் அங்காளஈஸ்வரி. திருமணம் முடிந்து மகள் நந்தினிபிரியா அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டதாலும், பகலில் மகன் நவீன்குமார் பள்ளிக்கூடம் சென்று விடுவதாலும், அந்த நேரத்தில் பக்கத்திலுள்ள சந்து வீட்டுக்கு அடிக்கடி சென்று அடைக்கலம் என்பவருடன் பழகினார். இந்தப் பழக்கத்தை வைத்து அடைக்கலத்திடம் ரூ.2 லட்சம் வரை வாங்கினார். ஆனாலும், மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலத்துக்கு குடைச்சல் தந்தார். பழக்கம் ஒருபுறம், கொடுக்கல் வாங்கல் இன்னொருபுறம் என,  இந்தத் தகாத பழக்கம் அடைக்கலத்துக்கு கசந்தது. அங்காளஈஸ்வரியோ, பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டாள். இதற்கு  ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்த அடைக்கலம், 7-ஆம் தேதி மதியம், சந்து வீட்டில் தன்னைச் சந்திக்க வந்த அங்காளஈஸ்வரியைக் கொலை செய்துவிட்டான். 

அங்காள ஈஸ்வரியின் தந்தை காளிமுத்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அடைக்கலத்தைக் கைது செய்தது அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம். 

வேலைக்குச் செல்லும் கணவன், புதுக்குடித்தனம் நடத்தும் மகள், பள்ளியில் பயிலும் மகன் என குடும்ப வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தபோது, 35 வயதில் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், சம்பந்தப்பட்டவனாலேயே கழுத்து நெறிக்கப்பட்டு உயிரை விட்டிருக்கிறாள் அங்காள ஈஸ்வரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.