Skip to main content

35 வயதில் மறைமுக வாழ்க்கை! கொலையில் முடிந்த தவறான பழக்கம்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

சிலவகை காதல்.. தவறான தொடர்புகள்.. கொலைகளெல்லாம் விசித்திரமாக உள்ளன.  அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கட்டக்கஞ்சன்பட்டி என்ற கிராமத்தில் அப்படி ஒரு கொலைதான் 7-ஆம் தேதி நடந்திருக்கிறது. 

 

Indirect life at age 35! The wrong habit that ended in bad incident


19 வருடங்களுக்கு முன் அங்காளஈஸ்வரி,  தனது 16 வயதிலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான திருமுருகன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 18 வயதில் நந்தினிபிரியா என்ற மகளும் 15 வயதில் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 18 வயதிலேயே மகள் நந்தினிபிரியாவுக்கும் திருமணம் நடத்திவிட்டார் அங்காளஈஸ்வரி. குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால், சிங்கப்பூர் போய் 4 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்துவிட்டு, கட்டக்கஞ்சன்பட்டிக்கு வந்தார் அங்காளஈஸ்வரி. திருமணம் முடிந்து மகள் நந்தினிபிரியா அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டதாலும், பகலில் மகன் நவீன்குமார் பள்ளிக்கூடம் சென்று விடுவதாலும், அந்த நேரத்தில் பக்கத்திலுள்ள சந்து வீட்டுக்கு அடிக்கடி சென்று அடைக்கலம் என்பவருடன் பழகினார். இந்தப் பழக்கத்தை வைத்து அடைக்கலத்திடம் ரூ.2 லட்சம் வரை வாங்கினார். ஆனாலும், மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலத்துக்கு குடைச்சல் தந்தார். பழக்கம் ஒருபுறம், கொடுக்கல் வாங்கல் இன்னொருபுறம் என,  இந்தத் தகாத பழக்கம் அடைக்கலத்துக்கு கசந்தது. அங்காளஈஸ்வரியோ, பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டாள். இதற்கு  ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்த அடைக்கலம், 7-ஆம் தேதி மதியம், சந்து வீட்டில் தன்னைச் சந்திக்க வந்த அங்காளஈஸ்வரியைக் கொலை செய்துவிட்டான். 

அங்காள ஈஸ்வரியின் தந்தை காளிமுத்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அடைக்கலத்தைக் கைது செய்தது அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம். 

வேலைக்குச் செல்லும் கணவன், புதுக்குடித்தனம் நடத்தும் மகள், பள்ளியில் பயிலும் மகன் என குடும்ப வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தபோது, 35 வயதில் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், சம்பந்தப்பட்டவனாலேயே கழுத்து நெறிக்கப்பட்டு உயிரை விட்டிருக்கிறாள் அங்காள ஈஸ்வரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.