மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திமுகவினர் திரும்பப் பெறலாம் என்றும், ரசீதை கொடுத்து நவம்பர் 28- ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பணத்தை திரும்பப் பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அந்த அறிவிப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட தலைவர் பதவியைத் தவிர கவுன்சிலர் பதவிக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நவம்பர் 27- ஆம் தேதி வரை திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடப்பதால் விருப்ப மனு பணத்தை திரும்பப் பெறலாம் என்று அதிமுக கட்சி தலைமை நேற்று அறிவித்தது. அதை தொடர்ந்து, திமுகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.