Skip to main content

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் உதவி..!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

Indian Medical Association doctors help Thiruvarur Government Medical College ..!

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை சார்பில் ஆக்சிஜன் புளோமீட்டர்கள் வழங்கப்பட்டது.

 

நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவிவரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதிதாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலினும் அதிரடி நடவடிக்கையால் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளைகள் சார்பில் ஆக்சிஜன் புளோ மீட்டர்கள் வழங்கி உதவி செய்துள்ளனர். புளோ மீட்டரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ஜோசப்ராஜிடம், இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைத் தலைவர் மருத்துவர் பாரதிதாசன், திருவாரூர் கிளைத் தலைவர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல், செயலாளர் மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். 

 

இதற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.