ADVERTISEMENT
சென்னை திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்டக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எழுமலை தலைமை தாங்கினார். மேலும் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments