Advertisment

இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி! (படங்கள்)

Advertisment

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (06.10.2024) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை பார்வையிட்டிருக்கலாம் இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நினைவுப் பரிசு வழங்கினார். அதே சமயம் இந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai indian air force Marina
இதையும் படியுங்கள்
Subscribe