Skip to main content

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலிடம் விசாரணை!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். 
 

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகிறது. 

INDIAN 2 FILM SHOOTING INCIDENT ACTOR KAMAL HASSAN GOING TO CBCID OFFICE

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று (03/03/2020) ஆஜராகும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் பேரில் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் கமல்ஹாசன் நேரில் ஆஜரானார். அவரிடம்  மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்து தொடர்பாக ஏற்கனவே இயக்குனர் ஷங்கரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிராவல் மண் ஒப்பந்தத்தில் முறைகேடு; கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி சோதனை

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Irregularity in Gravel Soil Contract; CBCID police raided the house of the mineral department officer!

 

கிராவல் மண் வெட்டி எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில், தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு கனிமவளத்துறை இணை இயக்குநர் சுரேஷ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) திடீர் சோதனை நடத்தினர்.

 

தர்மபுரி நகரம் சூடாமணி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், சென்னை கனிமவளத்துறை இணை இயக்குநர் நிலை -2 ஆக பணியாற்றி வருகிறார். சில புகார்களின் பேரில் அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். 

 

சுரேஷ், ஏற்கனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் துணை இயக்குநர், உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர் சேலம் ஆகும். தற்போது குடும்பத்துடன் தர்மபுரியில் வசிக்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 

 

Irregularity in Gravel Soil Contract; CBCID police raided the house of the mineral department officer!

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏரி, குளங்களில் கிராவல் மண் எடுக்க டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுரேஷ், இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றத்தில் முன் ஜாமீனும் பெற்றார். 

 

இது ஒருபுறம் இருக்க, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) காலை தர்மபுரியில் உள்ள சுரேஷின் வீட்டுக்கு இரண்டு கார்களில் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவருடைய வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். 

 

சோதனையின்போது வெளி ஆள்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாயில் கதவையும் உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். அதே பகுதியில் சுரேஷ், புதிதாக ஒரு சொகுசு வீடும் கட்டி வருகிறார். அது பற்றியும் விசாரித்தனர். 

 

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கனிமவளத்துறை இணை இயக்குநர் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.