Skip to main content

சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் போட்டியில் மெகா ஊழல்!!?  

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

வரும் 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்த ஒருநாள் போட்டிக்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இதுவரை விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஆயிரம் பேர் அமரக்கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் மீதமுள்ள 35 ஆயிரம் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்பட்டு வருவதாகவும், விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டுகளும் ஒரு மடங்கு மட்டுமல்லாது இரண்டு, மூன்று மடங்கு என 1500, 2500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இதன் மூலமாக மட்டும் இரண்டரை கோடி ரூபாய் ஊழல் நடைதிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 India-West Indies match in Chepauk

 

அதேபோல் கூல்டிரிங்ஸ் விளம்பரம் மூலமாக பல கோடி ரூபாய்  ஈட்டபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பழனி என்ற ஒருவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில்  நிர்வாகியாக  உள்ள அவர்மட்டுமில்லாமல் கார்த்திக் விசுவநாதன் என்பவரும், பிரசன்னா என்பவரும் இந்த கள்ள டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவதில் முக்கியமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு தலைமை தாங்குவது இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ஆகும். இவருடைய மகள் ரூபா என்பவர் தமிழ்நாடு கிரிக்கெட்  அசோசியேஷனுடைய தலைவராக இருக்கிறார்.

ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக கூறினாலும் அதிகப்படியான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. முழுமையாக இரண்டாயிரம், மூவாயிரம் என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், டிக்கெட் விற்பனையில் மட்டுமே 2 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் நிலையில் விளம்பரம், பார்ட்னர்ஸ் என மொத்தமாக சேர்க்கையில் 50 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

 

 India-West Indies match in Chepauk


ஏற்கனவே தமிழகத்தில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரச்சனைகள் எழ, சௌரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்று போட்டிகளில் ஊழலில் ஈடுபட்டதாக கண்டுபிடித்துள்ளனர். அதில் மட்டும் நடந்திருந்த ஊழல் 250 கோடி ரூபாய் என்றிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் மட்டும் 50 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.