Skip to main content

இந்தியாவில் துப்புறவு பணியின் போது ஏற்படும் விபத்துகளில் தமிழகத்திற்கு முதலிடம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரம் அபாயகரமாக இருப்பதாக, அங்கு ஆய்வு செய்த தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுநீரில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பொழுது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிதி உதவி வழங்க தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹெராணி திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார்.

அங்கு தரைதளம்,அவசர சிகிச்சை பிரிவு, ஹால் பகுதி, மருத்துவமனை கட்டிடத்தின் வெளிப்பகுதி, கழிவுநீர் செல்லும் பகுதி, உணவகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவருக்கு முகம் சுளிக்கும் படி இருந்ததால், கடுகடுத்த முகத்தோடு ஒவ்வொருவரிடமும் சிடுசிடுத்து பேசினார்.
 

 In case of accidents during the clearing process TAMILNADU FIRST

அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களோ எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வேலைப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களிடம், "பாதுகாப்பு சாதனங்களை ஏன் அணியவில்லை," என கேட்டார். அவர்களோ பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை என உண்மையை போட்டுடைத்தனர். ஊதியமாவது சரியா கொடுக்கப்படுகிறதா என கேட்டார். அதற்கு பணியாளர்கள் ஊதியத்தில் பாதியை பிடித்துக்கொண்டு மீதிய கொடுக்கிறாங்க என்றனர். 


இதனை கேட்டு மேலும் கோபமடைந்த அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே. விஜயகுமாரிடம் இது மருத்துவமனைப்போலவே இல்லை கழிவுகளின் கூடாரமாக இருக்கிறது. மருத்துவமனையில் சுகாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்றும், இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோயை உண்டாக்கும் வகையில் மருத்துவமனை இருப்பதாக கோபத்துடன் கூறினார்.
 

 In case of accidents during the clearing process TAMILNADU FIRST




 

அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியர் ஆனந்தை தொடர்பு கொண்டு மருத்துவமனையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை ஏன் கவனிக்கவில்லை என கேட்டார். இது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், " துப்புறவு பணியின் போது ஏற்படும் விபத்துகளில் தமிழகமே இந்தியாவில் முதல் இடமாக உள்ளது. விபத்துக்களை குறைக்கும் வகையில் துப்புரவு பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா? - கடுகடுத்த அமைச்சர்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'You will not clean even on the day the minister comes?'-said the minister

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது ஐடிஐ முதல்வர் சித்ராவிடம் இந்த ஐடிஐ எப்போது தொடங்கப்பட்டது?, எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ஆய்வுக்காக ஒவ்வொரு பணிமனையாக செல்ல முயன்ற போது ஐடிஐயின் தொடக்கப் பகுதியிலேயே குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி கணேசன் இப்படித்தான் ஐடிஐ வைத்திருப்பீர்களா? அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கேட்டார். அதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சி.வி கணேசன் இதற்கு எல்லாம் ஐடிஐ முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தினமும் ஐடிஐ வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து திடீரென அங்கிருந்த கழிவறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சியானார். இப்படி சுத்தமில்லாமல் இருக்கிறதே என்று தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு பணிமனையாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர். பயிற்றுநர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

தரமான பயிற்சியை கொடுத்து இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் சிலரிடம் ஐடிஐ படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தெரியுமா என்றும் கேட்டறிந்தார். ஒவ்வொரு பணிமனையாக சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் சி .வி கணேசன் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஐடிஐ முதல்வர் மற்றும் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Next Story

“7 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்துள்ளது” - ராதாகிருஷ்ணன் தகவல்!!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

7 colleges have got permission for admission this year

 

திண்டுக்கல் உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தார்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைத்துள்ளது. திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி பெற வேண்டும். கள்ளக்குறிச்சி, விருதுநகர், ஊட்டி கல்லூரிகளில் 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்களை ஒதுக்க வேண்டும் என தேசிய மருத்துவ கழகத்திடம் வலியுறுத்திவருகிறோம்.

 

திண்டுக்கல் உட்பட 4 இடங்களில் கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. அதே சமயம் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கரோனா மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் டெங்கு பெரிய தாக்கம் இல்லை. தற்போது 340 பேர் சிகிச்சை பெறுகின்றனர்” என்று கூறினார்.