Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... ராணுவவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020


 

india china border army incident ramanathapuram district admk mla

 

இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச்  சேர்ந்த இந்திய ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் பலரும் கலந்து கொண்ட நிலையில், உள்ளூரில் இருந்தும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறித்தும், இது சம்பந்தமான அவரது கருத்தினை தாங்கியும், "ராணுவ வீரரின் இறுதிச்சடங்கைப் புறக்கணித்தாரா முன்னாள் அமைச்சர்..?" என்ற தலைப்பினில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக நக்கீரனிடம் கூறியது போல், வீரமரணமடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியும், குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

 

india china border army incident ramanathapuram district admk mla

 
லடாக் பகுதியில் இந்தியா ராணுவத்தைச் சேர்த்த 20 ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. இதில் வீரமரணமடைந்த 20 வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தினைச் சேர்ந்த திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால் அக்கிராம மக்கள் மட்டுமின்றி தகவல் கேள்விப்பட்ட அனைவரும் சோகமயமாகினர். வீரமரணமடைந்த பழனியின் உயிரற்ற உடல் நேற்று முன்தினம் கடுக்கலூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

india china border army incident ramanathapuram district admk mla

 

இதில் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வேளையில், முன்னாள் அமைச்சரும், இந்நாள் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் மட்டும் மிஸ்ஸிங்.! இது சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில், "எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வரவில்லை. வேண்டுமென்றே புறக்கணித்தேன் என்பது தவறான செய்தி. ராணுவ வீரரின் தொண்டு அளப்பரியது. அதைப் போய் புறக்கணிப்பேனா..? உடல் நிலை சரியானதும் அவரது இல்லத்திற்குச் சென்று தேவையான நிதியுதவி வழங்கி, அவர்கள் குடும்பத்தை மேம்படுத்துவதே என் எண்ணம்." என்று நக்கீரனிடம் பதிலளிக்க செய்தி வெளியாகி மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

 

india china border army incident ramanathapuram district admk mla

 

இந்நிலையில், நேற்றைய தினம் கடுக்கலூரிலுள்ள ராணுவ வீரரின் நினைவிடத்திற்குச் சென்ற அதிமுக. கழக மருத்துவ அணி துணை செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர், வீரமரணமடைந்த குழந்தைகளை அருகினில் அழைத்து ஆறுதல் கூறினார். இதேவேளையில் ராணுவ வீரரின் மனைவி வானதிதேவியிடம் ரூ.2 லட்சத்தையும், அவரது தந்தை காளிமுத்துவிடம் ரூ.25 ஆயிரத்தையும் தனித்தனியே வழங்கியவர், "தமிழக அரசு கூறியது போல் ராணுவ வீரரின் மனைவிக்கு விரைவில் ஆசிரியர் பணி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.