Skip to main content

தேர்தல் நிதி தர மக்களை சுரண்டும் நிறுவனங்கள் – விலை உயர்வால் திண்டாடும் கட்டுமானத்துறை

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
ja


இந்தியா முழுமைக்கும் வீடுகள், வணிக வளாகங்கள், பெரு நிறுவனத்துக்கான கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் எனப்பல கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் விவசயாத்துக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறையில் தான் அதிகளவு தொழிலாளர்கள் உள்ளனர். அந்தளவுக்கு அந்த துறை பெரியது.

 


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பிறந்ததும் கட்டுமானத்துறைக்கான செங்கல், சிமெண்ட், மணல், கம்பி, பெயிண்ட் என பொருட்களின் விலை உயர்வது வாடிக்கை. அந்த விலை உயர்வு என்பது 2 முதல் 5 சதவீதமாக இருக்கும். ஜனவரி மாதம் முதல் ஜீன் மாதம் வரை இந்த விலை உயர்வு இருக்கும், பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் கட்டுமான பொருட்களின் விலை குறையும்.

 


இந்த 2019 ஜனவரி மாதமும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது 10 சதவிதம் அளவுக்கு திடீரென உயர்ந்து வணிகர்களையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதுப்பற்றிய எதிர்ப்பு சத்தம் எந்த பக்கமும் கிடையாது. பொதுமக்களை பாதிக்கும் விவகாரத்தில் முந்திக்கொண்டு அறிக்கை தரும் அரசியல் கட்சி தலைவரும், தலைவர்களும் கமுக்கமாக உள்ளனர்.  

 


இது எதனால் என கட்டுமானப்பொருட்களின் விற்பனையாளர்கள் சிலரை சந்தித்து நாம் உரையாடியபோது, மழையில்லாத காலக்கட்டத்தில் தான் கட்டுமானப்பணிகள் அதிகளவில் நடைபெறும். அப்போது பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர்வு என்பது 2 முதல் 5 சதவிதம் அளவுக்கு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக விலையை உயர்த்தியுள்ளார்கள்.

 


கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏ கிரேடு சிமெண்ட் 1 மூட்டை விலை 350, 360 அதிகபட்சமாக 390 வரை விற்பனையானது. பி கிரேட் சிமெண்ட் 1 மூட்டை விலை 310, 330 என விற்பனையானது. கடந்த ஜனவரி இறுதி முதல் 10 சதவிதம் விலை உயர்ந்து ஏ கிரேட் சிமெண்ட் விலை 30 முதல் 40 ரூபாய் உயர்ந்துள்ளது, பி கிரேட் சிமெண்ட் 20 முதல் 30 ரூபாய் என உயர்ந்துள்ளது.

 

அதேப்போல் கட்டுமானத்துறைக்கான டி.எம்.டி கம்பி கம்பெனிகளும் 10 சதவிதம் உயர்த்தியுள்ளது. முன்பு ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது, தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிய கம்பெனி கம்பிகள் விலையும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்படி கட்டுமானத்துறையில் உபயோகிக்கப்படும் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது என்றனர்.

 


எதற்காக இப்படியொரு விலை உயர்வு ? என காரணம் கேட்டபோது,  நாடாளமன்ற தேர்தல் தான் காரணம் என்றார்கள்.


சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது சர்வதேச அளவில், இந்திய அளவில், மாநில அளவில் தொழில்கள் செய்யும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தருவது வழக்கம். பெரு நிறுவனங்கள் அனைத்தும் கோடிகளில் தான் தேர்தல் நிதி தரும். ஆளும்கட்சிக்கு இவ்வளவு, எதிர்கட்சிக்கு இவ்வளவு, சிறு கட்சிகளுக்கு இவ்வளவு, சாதி கட்சிகளுக்கு இவ்வளவு என தரவேண்டும், தராமல் இருக்க முடியாது, அப்படி தரவில்லையென்றால் அவர்களால் பின்பு நிம்மதியாக தொழில் செய்ய முடியாது. காரணம் நிறுவனங்கள் அரசிடம் பல சலுகைகளை பெறுகின்றன, அதோடு, அரசை ஏமாற்றவும் செய்து நிதி முறைகேடுகளில் ஈடுபடும். இது ஆளும்கட்சி, எதிர்கட்சிகளுக்கு தெரியும். கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். அதற்கு காரணம், அந்த நிறுவன்ஙக்ள தரும் நிதி. நிதி தரவில்லையென்றால் குடைச்சல் தருவார்கள் என்பதால் அதற்கு பயந்தே தந்துவிடுவார்கள்.

 


இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தொழில் நிறுவனங்களிடம் கோடிகளில் தேர்தல் நிதி கேட்டுள்ளார்கள். நிறுவனங்கள் எப்போதும் தங்களது லாபத்தில் இருந்து எந்த காலத்திலும் தராது. இப்படி விலையை உயர்த்தி, அதில் இருந்தே தரும். அப்படித்தான் தேர்தல் நிதி தருவதற்காக வழக்கத்தை விட கட்டுமானப்பொருட்களின் மீது விலையை உயர்த்தியுள்ளது இந்த நிறுவனங்கள் என்றார்கள்.

 


தமிழகத்தில் முன்னணியில் உள்ள ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், தனது ஒரு பேக்டரியில் இருந்து மட்டும் தினசரி 10 லட்சம் மூட்டைகள் வெளியே அனுப்புகின்றன. ஒரு மூட்டை மீது 40 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளது அந்த நிறுவனம். தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை 405 ரூபாய். இப்படி விலையை உயர்த்தியதன் மூலமாக தினசரி 4 கோடி ரூபாய் கூடுதலாக செல்கிறது அந்த நிறுவனத்துக்கு. தேர்தல் முடியும் வரை இந்த விலை உயர்வு இருக்கும்.

 


சுமார் 3 மாதம் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், இந்த விலை உயர்வின் மூலம் மாதம் 120 கோடி, 3 மாதத்துக்கு 360 கோடியை சம்பாதிக்கிறது அந்த நிறுவனம். அதுவும் ஒரு பேக்டரியில் இருந்து மட்டும். இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்டரிகள் உள்ளது. இதேப்போல் தான் 10க்கும் மேற்பட்ட சிமெண்ட் கம்பெனிகள் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த கம்பெனிகள் இந்த 3 மாதத்தில் மட்டும் தோராயமாக 10 ஆயிரம் கோடியை விலை உயர்வின் மூலம் மக்களிடம்மிருந்து சுரண்டும். மக்களிடமிருந்து சுரண்டிய இந்த தொகையில் இருந்து தான் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக தரவுள்ளன. டி.எம்.டி கம்பி நிறுவனங்களும் அதையேத்தான் செய்யவுள்ளன என்றார்கள்.

 


அதேப்போல் தமிழகத்தில் பாலாறு, வைகையாறு, தென்பெண்ணையாறு, குண்டலாறு என அனைத்து ஆறுகளிலும் மணல் எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சில குவாரிகள் மட்டும்மே அரசின் சார்பில் செயல்படுகின்றன. ஒருநாளைக்கு தமிழகத்துக்கு மட்டும் 40 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசின் சார்பில், திருட்டுதனமாக அள்ளிவிற்கப்படுவதே 10 ஆயிரம் யூனிட் மணல் தான். அதேப்போல் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் இறக்குமதி செய்த மலேசியா மணல் விற்பனையை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளை விலை வைத்து விற்பனை செய்கிறார். இதனால் மணலுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. மக்களும் மணலுக்கு மாற்றான எம்-சாண்ட் க்கு கட்டுமானம் செய்பவர்கள் மாறிவிட்டார்கள்.

 


தமிழகத்தில், திருநெல்வேலி, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் எம்-சாண்ட் தயாரிக்கும் ஆலைகள் இயங்கிவருகின்றன. அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் இந்த ஆலைகளிலும் தேர்தல் நிதி ஒவ்வொரு கட்சியின் சார்பில் அதன் சங்கங்களில் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் அதன் விலையையும் உயர்த்த முடிவு செய்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்கின்றனர்.

 


இரண்டாண்டுக்கு முன்பு மோடி அரசின் பணமதிப்பிழப்பால் கட்டுமானத்துறை பெரும் சரிவை சந்தித்தது, தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தில் மட்டும் இந்த துறையில் ரொக்க பரிமாற்றம் நடைபெற்றுவந்தது. பண மதிப்பிழப்பால் பண பரிமாற்றம் தடைப்பட்டது, தொழில்கள் முடங்கின. லட்ச கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். அதிலிருந்து எழுந்து உட்காருவதற்குள் மோடியரசு ஜி.எஸ்.டியால் அடித்தது, அதிலிருந்து இன்னும் மீளவில்லை கட்டுமானத்துறை. தற்போது, தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் ஒரு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு கட்டுமானப்பணிகளில் ஒரு தேக்கம் ஏற்படும் என்கிறார்கள் இந்த துறையில் உள்ளவர்கள்.

 


தேர்தல் நிதி என்பது தேர்தல் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சார செலவு, வாக்குகள் பெற வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக கட்சிகள் திரட்டுவது. மக்களுக்கு தருவதற்காக மக்களிடம்மிருந்தே சுரண்டி மக்களிடம்மே திருப்பி தரப்போகிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த அரசியலை, மோசடியை மக்கள் அறியாதவரை மக்களிடம் சுரண்டிக்கொண்டே இருப்பார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.