Advertisment

தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் சுதந்திர தின விழா

Independence Day Celebration at Theppakkad Elephant Breeding Camp

Advertisment

இன்று நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

அதேபோல் முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. காப்பகத்தின் துணை இயக்குனர் வித்யா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். யானைகள் மீது தேசியக் கொடியை பிடித்தவாறு வனத்துறை ஊழியர்கள் அமர்ந்திருந்தனர். இதில் வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

elephant mudhumalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe