Skip to main content

அதிகரிக்கும் தொற்று பரவல்; சுற்றுலா தலங்களை மூடிய மாவட்ட நிர்வாகம்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Increasing the spread of infection; District administration closes tourist sites!

 

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அரசு இந்த விதிமுறைகளை விதித்துள்ளது.

 

முன்னதாக, இந்த சுற்றுலா தலங்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவித்து விளம்பர தட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்