Skip to main content

சிறுத்தைகளின் தொடர் வேட்டை... -அச்சத்தில் மக்கள்.

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில் சிறுத்தை புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டதோடு காட்டை விட்டு கீழே சமவெளி பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வரத்தொடங்கி விட்டது. மலை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வருவாய்க்காக ஆடு வளர்க்கிறார்கள் அவ்வாறான ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடுவதாக மக்கள் கூறுகிறார்கள்.
 

increasing leopard's disturbance


பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் 5 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இரவு நேரத்தில் ஆடுகளை பசுவபாளையம் கிராமத்தில் உள்ள தனது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒரு சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்கு சொந்தமான பட்டியில் உள்ள 3 ஆடுகளை அடித்துக்கொன்று ருசித்தது.

கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்த உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து பவானிசாகர் வனத்துறையினர் நேற்று சிறுத்தையை பிடிப்பதற்காக கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் ஆடு அல்லது நாய் கட்டி வைத்து இரவு நேரத்தில் வனத்துறை பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் ஒரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

இதனிடையே சத்தியமங்கலம் வனப்பகுதியான புதுக்குய்யனூரில் மீண்டும் ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து தூக்கிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. விவசாயியான மூர்த்தி தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். 


நேற்று வழக்கம்போல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை மூர்த்தி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. அந்த இடத்தில்.ஆட்டுு ரத்தம் சிதறிியிருந்தது. ஏற்கனவே இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் உடனடியாக அவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சிறுத்தை ஆட்டை அடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றிக்கிறது என்பதை  வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடம் மற்றும் வனப்பகுதியில் ஆட்டின் உடல் பகுதியை வைத்து உறுதிப்படுத்தினார்கள். ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் மனிதர்களைை கண்டால் விட்டு வைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் மலையையொட்டி வாழும் மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.