Skip to main content

அதிகரிக்கும் கள்ளநோட்டு புழக்கம்; காவல்துறையில் சிக்கிய நபர்..! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Increasing counterfeit currency; The person trapped by police

 

கள்ளநோட்டை மாற்றுதல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை மன்னார்குடி காவல்துறையினர் தனியார் விடுதி ஒன்றில் கைது செய்தனர். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள திருமக்கோட்டை மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் மீது கஞ்சா கடத்தல், கள்ளநோட்டு மாற்றுதல் போன்ற பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்தச் சூழலில் மன்னார்குடியை அடுத்த அசேஷம் என்ற பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாதவன் தங்கியிருப்பதாக மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, தனியார் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது விடுதியில் தங்கியிருந்த மாதவனை அடையாளம் தெரியாமல் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரது அறையை சோதனை மேற்கொண்டபோது அங்கு சுமார் ரூ.2 லட்சத்திற்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதையும், அந்த நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். 

 

"மன்னார்குடி நகரத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்துவருகிறது. கள்ளநோட்டை அச்சடிக்கும் மையமும் மன்னார்குடியிலோ சுற்றுவட்டாரப்பகுதியிலோ இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்துவருகிறது. விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளோம். மாதவனிடமிருந்து 2 லட்சம் மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு பணமும் 50 கிராம் கஞ்சா மற்றும் அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்கிறார்கள் காவல்துறையினர்.

 

இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவ, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தால் பீதியில் உறைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.