டெல்டாபாசனத்திற்காககடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டது. கடந்த 09ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கனஅடி என இருந்த நிலையில், 10ஆம் தேதிநீர்திறப்பு8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
பாசனத்திற்குநீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், நாள் ஒன்றுக்கு அணையின் நீர்மட்டம் ஒரு அடி அளவிற்கு குறைந்துவந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு 34.41 டிஎம்சி ஆக இருக்கிறது.டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்துவருவதால் பாசன தேவை என்பது குறைந்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்குநீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியில்இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கபினிஅணையில் 14,688 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,324 கனஅடி நீரும்திறக்கப்பட்டுவருகிறது.