சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் நல்ல மழைபெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் இவ்வளவு அதிகமான மழை இன்று (05.01.2021) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து 3,180 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.