Skip to main content

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு... அணைகளின் நீர் இருப்பு நிலவரம்!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

WATER

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர் வரத்து 22,000 கன அடியிலிருந்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 36 ஆயிரம் கன அடியிலிருந்து 36,446 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 6,446 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,841 கன அடியிலிருந்து 19,665 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.27 அடியாகவும், நீர் இருப்பு 35.57 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன தேவைக்காக 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

தமிழகத்தில் பல நாட்களாக மழை பொழிவு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சோலையாறு அணை பகுதியில் 9.3 சென்டி மீட்டர் மழையும், நீரார் அணையில் 7.3 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 6.8 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 2.9 சென்டி மீட்டர் மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. 165 அடி கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியாகவும், நீர்வரத்து 6,622 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 5.59 டிஎம்சி ஆக உள்ள நிலையில் அணையிலிருந்து 6,655 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.