Advertisment

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Increase in water flow in Cauvery

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவானது அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 3,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் கடந்த 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
dharmapuri river cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe