Skip to main content

கடலூர்: "என்.எல்.சியின் மொத்த மின் உற்பத்தி 56 லட்சத்து 61 ஆயிரத்து 60 யூனிட்டுகளாக அதிகரிப்பு! தலைமை நிர்வாக இயக்குனர் அறிவிப்பு!     

Published on 15/08/2020 | Edited on 15/08/2020

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவன தலைமையகத்தில் இந்திய நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் பங்கேற்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்.எல்.சி முதன்மை மேலாண் இயக்குனர் ராகேஷ் ஷர்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசும்போது, "ஒடிசா மாநிலம், தாலபிராவில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 2 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் இரண்டு சுரங்கங்கள் துவங்கப்பட்டன. இச்சுரங்கங்கள் முழு உற்பத்தியை எட்டியபின் ஆண்டுக்கு நமது சுரங்க உற்பத்தி 5 கோடிய 6 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அந்தமான் நிகோபார் தீவுகளில் 20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டத்தில் மின் உற்பத்தி துவங்கியதன் மூலம் நமது மொத்த மின் உற்பத்தியளவு மணிக்கு 56 லட்சத்து 61 ஆயிரத்து 60 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. 

 

கடந்த நிதியாண்டில் நமது நிறுவனம் 9,133 கோடியே 29 லட்சம் மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது 2018–19-ஆம் ஆண்டில் 8,059 கோடியே 27 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டை  விட 13.33 சதம் அதிமாகும். கடந்த 2018 –19ம் நிதியாண்டில் நமது நிறுவனம் 45.30 சதவீத பங்கு ஈவுத் தொகை வழங்கிய நிலையில், 2019–20-ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக 70.60 சதவீதத்தினை பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியை நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த நிறுவனத்திற்கான நவரத்னா தகுதி பெற்ற நிறுவனங்கள் பிரிவில் கடந்தாண்டு விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியானதாகும் என்று குறிப்பிட்டார். 

 

விழாவில் நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 100 சதம் மாற்றுத்திறனாளி மாணவி ஜி.வி.ஓவியா 10ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வெழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்றதற்காக பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. 

 

விழாவில் இயக்குனர்கள் விக்ரமன், என்.என்.எம்.ராவ், ஷாஜி ஜான், ஜெய்குமார் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி நகரிய பகுதியில் கொரனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விழாவில் பங்கேற்க தனி பகுதி அமைக்கப்பட்டிருந்தது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.