Skip to main content

வெளுத்துவாங்கும் மழை; நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்; மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா 

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

To increase the moisture level of the paddy; Mannargudi Assembly Member DRP Raja

 

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்மணிகள் முழுவதும் ஈரமாகிவிட்டதால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 22% உயர்த்த வேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மண்டல மேலாளரிடம் மனு அளித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை சாகுபடி பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு வயலில் தயாரான நிலையில் இருந்த நெல் வயல்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி நெல்மணிகள் முழுவதும் ஈரமாகி முளைக்க துவங்கிவிட்டது. அதோடு அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல் முழுவதும் போதிய பாதுகாப்பு வசதியின்றி நனைந்தால் விவசாயிகள் செய்வதறியாமல் கையறுநிலையில் இருக்கின்றனர்.

 

இந்நிலையில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் மூடி கிடக்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 22% உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா  திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணனிடம் மனு அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.