Increase in flow to Bhavanisagar Dam

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கனமழை காரணமாக 4,971 கனடியாக இருந்த பவானிசாகர்அணைக்கான நீர்வரத்து ஒரே நாளில் 13, 982 கனஅடியாக யாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது 16,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு கடந்த 10 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.