Skip to main content

இந்த குற்றங்களுக்கு ஆபாச படங்கள்தான் காரணம்: ஐகோர்ட் வேதனை

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

 

தவறான தொடர்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை அதிகரிப்புக்கு ஆபாச படங்களே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது 
 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘திருச்செங்கோடு கல்லூரியில் படிக்கும் 19 வயதாகும் தனது இளைய மகளை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி ஒரு மனுவை தாக்கல் செய்தார். 


  high court

அந்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகரில் கள்ளக்காதல் காரணமாக 158 கொலைகள் நடந்துள்ளன. சென்னை தவிர தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற கள்ளக்காதல் விவகாரத்தால் 1301 கொலைகள் நடந்துள்ளன. கள்ளக்காதல் காரணமாக கொலை இல்லாமல் சென்னையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 213 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை தவிர தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 621 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது. 
 

அந்த பட்டியலைப் பார்த்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் நாங்கள் 18 கேள்விகள் கேட்டிருந்தோம். 2 கேள்விகளுக்கு மட்டும் பதில் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் தவறான தொடர்பு காரணமாக நடைபெறும் கொலை மற்றும் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வருகின்றன. குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் இதுபோன்ற சமூக பிரச்னைகளை தீர்க்க அரசு யோசனை செய்ய வேண்டும்.
 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்ததாக தெரியவந்தால் அதற்கான அடிப்படை காரணத்தை போலீசார் முதலில் ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும், செல்போன் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இன்றைய இளைய தலைமுறை உள்ளது என்றும், செல்போன்களில் வரும் ஆபாச படங்களை பார்த்து சமுதாயம் சீரழிகிறது. கள்ளக்காதல் மற்றும் குழந்தைகள் வன்கொடுமைக்கு காரணம் இணைதளங்களில் பரவும் ஆபாச படங்களே காரணம். 
 

எனவே, இந்த தவறான உறவால் கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடந்த ஆள் கடத்தல், தற்கொலை, தாக்குதல் ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்களை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.