திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள பாலாஜி, விக்னேஷ், எஸ்.ஆர்.பி என்கிற பிரபலமான 3 நகைகடைகளில் சென்னையில் இருந்து சுமார் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் வந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
காலையில் தொடங்கிய சோதனை தற்போதும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுப்பற்றிய முழு தகவல் இன்னும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.