Skip to main content

திரைப்படத் தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

The income tax department will continue to check the homes and offices of filmmakers!

 

தமிழகத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்சியர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

 

மதுரையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று (02/08/2022) காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையைத் தொடங்கினர்.  இன்றும் இரண்டாவது நாளாக சோதனையானது நடைபெற்று வருகிறது. பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வரும் இவர், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும், விநியோகித்து வருகிறார். 

The income tax department will continue to check the homes and offices of filmmakers!

சென்னையைத் தொடர்ந்து, மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடுகள், பைனான்ஸ் அலுவலகங்கள், தங்கும் விடுதி மற்றும் சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் இரவைக் கடந்து சோதனை நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுக்கு சொந்தமான தியாகராயர் நகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டூடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஞானவேல் ராஜாவின் வீடு மற்றும் அலுவலகம், கைதி, சுல்தான் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் வீடு, அலுவலகம், விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது. 

 

அண்மையில் வெளியான படங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில், தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடப்பதாகவும், இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.