
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்டப் பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் கடந்த வாரம்நிறைவுசெய்தார். தற்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்.
இதற்காக ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் தி.மு.க கட்சிகளை அவர் கடுமையாகவிமர்சனம் செய்துவருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்துத் தெரிவித்துவருகிறார். இந்நிலையில், வருமான வரி செலுத்தியது தொடர்பாக தன்னிடம் வருமான வரித்துறைதான் கேள்வி கேட்கவேண்டும் என்றும், தனி நபர்கள் என்னிடம் அது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்க எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Follow Us