சென்னை பள்ளிக்கரணை அருகே பெரும்பாக்கத்தில் டாஸ்மாக் மது விற்பனை செய்தபோது ஏற்பட்ட தகராறில் இருவர்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு டாஸ்மாக்கை பூட்டிய பின் சட்டவிரோதமாக மதுபானம் வாங்க வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பார்ஊழியர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மது வாங்க வந்தஇருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கரணையை சேர்ந்த ஸ்டீபன், ஆனந்தை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.